
வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ‘பிங்கி’ என்கிற எட்டுவயது கிராமத்து ஏழைச் சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட விவரணப்படத்துக்கும் இந்த வருடம் ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.
கிளப்ட் லிப்ட் பேலட் எனப்படும் மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவுடன் பிறந்த இந்த பிங்கி, அந்த பிறவிக்குறைபாடு காரணமாக தன் வயதொத்த குழந்தைகளின் வெறுப்புக்கும் கேலிக்கும் உள்ளாகி அவமானப்பட்டு ஒதுங்கி வாழ்கிறாள். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த குறைபாடு நீக்கப்பட்ட பிறகு அந்த சிறுமி தன்னம்பிக்கையுடன் மற்றக் குழந்தைகளோடு விளையாடி மகிழ்வதாக அந்தத் திரைப்படம் நிறைவடைகிறது.
இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இப்படியான மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவு அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 35,000 குழந்தைகள் இந்த குறைபாட்டுடன் பிறப்பதாகவும், இந்த குறும்படத்தை தயாரித்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தக் குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருது மூலம் இந்த குறைபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இது ஒரு தூண்டுகோலாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment