Sunday, March 8, 2009

பட்டுகோட்டை அழகிரி ஒரு பாடலுக்கு 8 நாயகிகள் !


ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கிங் தெலுங்கு திரைப்படம் ‘பட்டுகோட்டை அழகிரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. இதில், நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அப்பாவியின் சொத்தை அபகரிக்க முயலும் வில்லன் கோஷ்டியை கதாநாயகன் அழிப்பதே கதை. இதை பக்கா மசாலாப் படமாக இயக்கியுள்ளார் சீனு. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷா, அனுஷ்கா, ஜெனீலியா, ப்ரியாமணி, சார்மி, காம்னா, சினேகா உல்லால், மம்தா என 8 நாயகிகள் நாகார்ஜுனாவோடு நடனமாடியிருக்கிறார்கள். பட்டுகோட்டை அழகிரி மார்ச் மாதம் வெளிவருகிறார்...

பாத்திமா பேகம் ஆனார் ராஜஸ்ரீ!


அன்சாரி ராஜா என்பவரை காதலித்து ரகசியத் திருமணம் செய்து கொண்ட நடிகை ராஜஸ்ரீ இப்போது கணவருக்காக இஸ்லாம் மதத்திற்கே மாறி விட்டார்.
கருத்தம்மா படத்தில் அறிமுகமானவர் ராஜஸ்ரீ. மாதவி என்ற இயற்பெயர் கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்த விட்ட நிலையில் டி.வி., தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த அன்சாரி ராஜா என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார் அவர்.
இதனால் ராஜஸ்ரீயின் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், ராஜஸ்ரீ இஸ்லாம் மதத்திற்கே மாறி விட்டாராம். தனது பெயரையும் பாத்திமா பேகம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இனி சினிமா, டி.வி., தொடர்கள் எதிலும் ராஜஸ்ரீ… ஸாரி பாத்திமா பேகத்தை பார்க்க முடியாது. நல்ல குடும்பத் தலைவியாக அவர் மாறிவிட்டார்.

ரஜினி-ஐஸ்வர்யாராய் எந்திரன் பாட்டு !


ரஜினியின் எந்திரன் படப் பிடிப்பு இரு மாதங்கள் வேலூர், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நடந்தது. விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி, ஆய்வு கூடத்தில் ரோபோவை உருவாக்கும் காட்சிகள், சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் அதை அறிமுகம் செய்யும் காட்சிகள் போன்றவை எடுக்கப்பட்டன.
வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஓரிரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. ஐதராபாத்தில் பிரமாண்ட பாடல் காட்சியொன்றை படமாக்கப்பட உள்ளது. முதல்வன் படத்தில் இடம் பெறும் முதல்வனே வனே வனேவனே வனே முதல்வனே’ என்ற பாடல் சாயலில் இது எடுக்கப்படுகிறது.
1000 துணை நடிகர்கள்-நடிகைகள் இதில் ஆடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஐஸ்வர்யாராயும் நடனம் ஆடுகிறார்கள். துணை நடிகர்கள் ரோபோ காஸ்ட்யூம் அணிந்து இதில் ஆடுகின்றனர். இதற்கான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மதுஸ்ரீ பாட பதிவு செய்யப்பட்டது. இயக்குநர் ஷங்கர் பாடல்காட்சிகளில் அக்கறை காட்டுவார். பாட்டும், டான்சும் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
அன்னியன் படத்தில் ஷரண்டக்க ரண்டக்க’ பாடல் மற்றும் சிவாஜியில் ஷவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி’ பாடல் சாயலில் இந்த எந்திரன் பாட்டு உருவாகிறது. இப்பாட்டுக்காக கூடுதல் செலவு செய்யப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கப்படும் இடத்தை இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பாடலை கவர்ச்சியாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு அதற்கேற்ற மாதிரி ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அசின், அடுத்ததாக ஜப்பானிய மொழி திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.


தென்னக சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு ஏற்றுமதியாகி இருக்கும் நடிகை அசின், அடுத்ததாக ஜப்பானிய மொழி திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகவுள்ள திரைப்படம் ‘நைன்டீன்த் ஸ்டெப்’. பாலிவுட் இயக்குநர் பரத் பாலா இயக்குகிறார். ஜப்பானிய நடிகர் தடானோபு அஸானோ கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் பாரம்பரியமிக்க இந்தியப் பெண் வேடத்தில் நடிக்கும் அசின், படத்தின் கதைப்படி களரிச் சண்டை போடுகிறார். இதற்காக கேரளாவில் கோட்டயம் பகுதியில் உள்ள களரிச் சண்டை நிபுணர்களிடம் முறைப்படி களரிச் சண்டையை அசின் கற்க உள்ளார்(நீங்க பார்த்தாப் போதாதா?).
தற்போது ‘லண்டன் ட்ரீம்ஸ்’ இந்தி படத்தில் நடித்து வரும் அசின், ஏப்ரல் மாதம் கேரளத்துக்கு வந்து களரிப் பயிற்சியைத் தொடங்குகிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஜூன் மாதம் தொடங்கவுள்ள இந்தப் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள் !


நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்

சாத்துக்குடி 1
ஆரஞ்சு 2
ஆப்பிள் (தோலுடன்) 1
கொய்யா (சிறியது) 2
பேரிக்காய் (சிறியது) 2
வெள்ளரிக்காய் 2
அன்னாசிப்பழம் 4 வளையங்கள்
தர்பூசணி 1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.

உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.

வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு 200 மி.லி.
வாழைத்தண்டு சூப் 200 மி.லி.
அருகம்புல் சூப் 200 மி.லி.
நெல்லிக்காய் சாறு 100 மி.லி
கொத்தமல்லி சூப் 100 மி.லி.
கறிவேப்பிலை சூப் 100 மி.லி.

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டை 1 (வெள்ளைக் கரு மட்டும்)
மீன் 2 துண்டுகள்
கோழிக்கறி 100 கிராம் (அவித்தது)

மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Wednesday, March 4, 2009

உலகப் பொருளாதார மந்தம் வறிய நாடுகளின் வயிற்றில் அடிக்கப்போகிறது ஐ.எம்.எப் கவலை !


வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்ப இயலாத நிலை வருகிறது…
சிங்கள அரசை போருக்குள் இறக்கிவிட்ட புத்திசாலிகளுக்கு பெரு வெற்றி…
மீள முடியாத வறுமைக்குள் சிக்குப்படப் போகும் நாடுகளின் பட்டியல் வெளியானது..
போரை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்த இலங்கைக்கும் அபாயம்…
ஒபாமா ரஸ்யாவுக்கு அனுப்பிய கடிதம்…
தற்போது உலகளாவியரீதியில் இடம் பெறும் பொருளாதார மந்தம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை தாக்கியது போல வறிய நாடுகளையும் ஓங்கியடிக்கும் பருவம் வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் அங்கு பணியாற்றும் வறிய நாடுகளின் மக்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. இதன் காரணமாக இவர்களை நம்பி வாழும் ஆசிய, ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு முன்னரைப் போல உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வறிய நாட்டு பிரஜைகள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்றும் அது கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் ஆபிரிக்க வட்டகையில் 26 நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகள் பலத்த தாக்கத்தை சந்திக்க நேரும் என்றும் கூறுகிறது. வறிய நாடுகளில் பல இப்பொழுதே மேலை நாடுகளின் உதவி வழங்கும் பொருளாதாரத்தில்தான் காலம் ஓட்டி வருகின்றன. மேலை நாடுகள் வங்குரோத்தடைவதால் இவர்களுக்கு உதவி வழங்குவது சிரமமாக மாற்றமடையும். தற்போதைக்கு ஏழை நாடுகளை காப்பாற்ற 140 மில்லியாட் குறோணர்களை ஒதுக்க ஐ.எம்.எப் முன் வந்தாலும் கூட அது போதிய உதவியாக அமையாது. மொத்தம் 840 மில்லியாட் தொகை ஏழை நாடுகளை காக்க உடனடியாகத் தேவைப்படும் என்றும் அது கூறுகிறது.
இந்த அவலமான நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுணும் இன்று சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த பொருளாதார சரிவில் இருந்து தமது நாடுகளையும், மற்றய நாடுகளையும் எப்படிக் காப்பதென உரையாடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தம்மிடம் சரியான திட்டம் இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதய நிலையில் மோசமான பங்குச்சந்தை வீழ்ச்சிகளை உலகம் சந்திக்கும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை அமெரிக்க அதிபர் ரஸ்ய அதிபருக்கு சென்ற மாதம் நடுப்பகுதியில் அனுப்பிய கடிதமும் முக்கியம் பெறுகிறது. ஈரான் அணு குண்டு தயாரிப்பதை ரஸ்யா தடுத்தால் தாம் போலந்து, துருக்கி போன்ற நாடுகளில் ஏவுகணைகளை நிறுவும் திட்டத்தை கைவிடத் தயார் என்றும் கூறியுள்ளார். ரஸ்யா இதற்கான பதிலை இதுவரை வழங்கவில்லை. அமெரிக்கா ஏவுகணைகளுக்கு ஒதுக்கும் பணத்தையும் மீதம் பிடிக்க முயல்வதையே இந்தக் கடிதம் காட்டுகிறது.
முன்னைய பொருளாதார நெருக்கடி ஈராக்கை சூறையாடியது போல இனி வேறு பல நாடுகளையும் சூறையாட இடமிருக்கிறது. இந்தவகையில் பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் மிக அவதானமாக இருக்க வேண்டிய பருவம் இதுவாகும். அதுபோல சிறீலங்கா அரசும் அவதானமாக இருக்க வேண்டிய புறச் சூழல் நிலவுவதை மறுக்க முடியாது. சிறீலங்காவில் நடைபெறும் போர் நிறுத்தப்படாமல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஆபத்தான நாட்களாகவே இருக்கும். வன்னியில் வந்த பட்டினியைவிட பெரிய பட்டினிக்குள் சிங்கள தேசம் சிக்குப்படும் அபாயத்தையும் நிராகரிக்க முடியாது. சிங்கள அரசை உசுப்பிவிட்டு போர்ச் சகதிக்குள் இறக்கியவர்கள் புத்திசாலிகளே.

Monday, March 2, 2009

Eight Sri Lankan cricketers wounded in Pakistan shoot-out





Eight members of Sri Lanka's national cricket team have been wounded, and five Pakistani police officers killed, after gunmen opened fire on the team bus in eastern Pakistan.

They appeared to be well-trained terrorists... They were armed with rockets, hand grenades, Kalashnikovs.

Terror struck at the heart of cricket when masked gunmen attacked the bus carrying the Sri Lankan cricket team to the Gaddafi Stadium in Lahore. Five cricketers, including Mahela Jayawardene, the Sri Lankan captain, and his deputy Kumar Sangakkara, received minor injuries. The attack left five security men dead and will almost certainly lead to abandonment of the ongoing Test match.

While there have been terror strikes on the peripheries of cricket, this is the first time players have been directly targeted. The Sri Lankans were on their way to the Gaddafi Stadium when their bus was attacked by five armed terrorists near Liberty market. Habibur Rehman, chief commissioner of police, said 12 masked terrorists fired at the Sri Lankan team bus. The gunmen shot at the wheels of the bus and also injured the driver. A grenade was also thrown at the bus but it missed. The others players injured are Ajantha Mendis, Thilan Samaraweera and Tharanga Paranavitana

"The bus came under attack as we were driving to the stadium, the gunmen targeted the wheels of the bus first and then the bus," Mahela Jayawardene told Cricinfo. "We all dived to the floor to take cover. About five players have been injured and also Paul Farbrace [a member of the support staff], but most of the injuries appear to be minor at this stage and caused by debris."

The Sri Lankan team had stepped in to fill a gap after the Indian government had barred the Indian team from touring Pakistan in the aftermath of the terror attack in Mumbai by Pakistan-based terrorists.